சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனர் என் .ஆர். நாராயண மூர்த்தி ஒரு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும்போது, இந்திய நாடு முழுவதும் வாரம் 70 மணி நேரம் வேலை என்பதை நோக்கி - குறிப்பாக இளைய தலைமுறையினர் நகர வேண்டும் என்று கூறினார். இதே கருத்தை சில பெரும் நிறுவனங்களின் தலைவர்கள் ஆதரிக்கிறார்கள்
தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இந்தியாவில் ஏற்கனவே அதிக வேலை நேரத்தில் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள் என்கிற களச் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் இம்மாதிரியான கருத்துக்கள் வருகின்றன. அதிக நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களை கொண்டு கணக்கீடு செய்த ஓஇசிடி ஆய்வில்,187 நாடுகளில் இந்தியா 136 வது இடத்தில் உள்ளது. இந்தியத் தொழிலாளி ஒரு வருடத்திற்கு 1660 மணி நேரம் பணிபுரிகிறார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இதை மதிப்பிட்டால் 2281 டாலர் ஆகும். இதர நாடுகளில், இதே நேரத்தில் பணிபுரியும் தொழிலாளர் உழைப்பின் ஒட்டுமொத்த ஜிடிபியை கணக்கிட்டால் இந்தோனே சியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக உள்ளது. இந்தோனேசியாவில் வருடத்திற்கு 1660 மணி நேரத்திற்கு ஜி டி பி 4292 டாலரும் ,அதுவே ஆஸ்திரேலியாவில் வருடத்திற்கு 1683 மணி நேரம் பணிக்கு ஆச்சரியப்படும் வகையில் ஜிடிபி 63, 455 டாலராகவும் உள்ளது .
மேலும் இந்திய தொழிலாளர் சட்டத்தில், கடுமையான போராட்டத்திற்கு பின் கிடைத்த உரிமையான 8 மணி நேர வேலையை திசை திருப்புவதாக, வாரத்திற்கு 70 மணி நேரம் பணி என்கிற ஆலோசனை முன்வைக்கப்படுகிறது.
ஒரு வேலையை அர்ப்பணிப்புடன் செய்வது என்பது பாராட்டத்தக்கது. அதே நேரம், அதற்காக தங்களுடைய வாழ்க்கையை சீரழித்து உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. துரதிர்ஷ்டவசமாக உலகத்தில் மகிழ்ச்சியாக உள்ள நாடுகளின் பட்டியலில் 2023 இல், இந்தியா 4036 புள்ளிகளைப் பெற்று 126 வது இடத்தை பெற்றுள்ளது. இது, 2013இல் 4772 புள்ளிகளை பெற்று 111 வது இடத்தில் இருந்தது.
கூடுதல் நேர பணி செய்ய வேண்டும் என்பதற்கு பின்னால் உள்ள உண்மை காரணங்க ளை ஆராய வேண்டி உள்ளது. ஏனென்றால் கூடுதல் பணிக்கான வேலை நேரத்திற்கு கூடுதல் ஊதியம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்த முரண்பாடுகள் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த பெரும் நிறுவனங்கள் தங்களுடைய வளர்ச்சியை முன்னிறுத்துகிறார்களே தவிர ,தேசத்தின் வளர்ச்சியை அல்ல.
தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாட்டா, “இந்தியா, பொருளாதாரத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் நாடாக இருக்க வேண்டியது இல்லை. ஆனால் எனக்கு இந்தியா மகிழ்ச்சி யான நாடாக இருக்க வேண்டும் “என்கிறார். தேசத்தின் வளர்ச்சி சந்தேகத்துக்கிடமின்றி எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முதன்மையானது மக்களின் நலன். பிசினஸ் லைன் (நவ.1) ஏட்டில் இருந்து, தமிழில் : ஆர்.மைதிலி